சங்கர கல்லூரியில் "நயா 2017" கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார விழா


கோவை சரவணம்பட்டியில் உள்ள சங்கர கல்வி நிறுவனம் ஆண்டுதோறும் "நயா 2017" என்னும் கல்லூரிகளுக்கு இடையேயான மேலாண்மை மற்றும் கலாச்சார விழா நடத்தி வருகிறது. இவ்விழாவில் தெனிந்திய கல்லூரி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த விழா மேடை மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது. நிகழ்ச்சியினை கல்லூரி இணைச் செயலாளர் சந்தியா ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

 





நிகழ்ச்சியில் கல்லூரி துணை இணைச் செயலாளர் நித்யா ராமச்சந்திரன் பேசுகையில், மாணவர்கள் திறமையில் வெற்றி உள்ளதாகவும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இதில், ஒருங்கினைப்பாளர்கள் மூலம் மாணவர்களுக்கான குறும்படம், குழு நடனம், முக ஓவியம், வினாடி வினா, நெருப்பில்லா சமையல், திறமை மற்றும் அறிவு சம்மந்தமான நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் தென் இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 750க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். கல்லூரி வளாகங்களில் ஆங்காங்கே உணவகங்கள், ஐஸ்கிரீம் விற்பனை கூடங்கள் மற்றும் பல்வேறு கடைகளும் அமைக்கப்பட்டது. 



இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் பரிசுப் பொருட்களை வழங்கினார். துறை தலைவர் பிரியா கல்யாணசுந்தரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றியினை தெரிவித்தார். ஒருங்கினைபாளர்கள் திருஞான சம்பந்தன், நித்யா, சரவணக்குமார் மற்றும் விஷ்ணு பிரியதர்ஷினி ஆகியோர் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தனர். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...